மருந்து
திருக்குறள்:
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
ADVERTISEMENTS
உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்.
மு.வ உரை:
முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு
அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும்
வழியாகும்.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து
உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப்
பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி.
ADVERTISEMENTS
Who has a body gained may long the gift retain,
If, food digested well, in measure due he eat again.
ADVERTISEMENTS
If (one's food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soul.