புல்லறிவாண்மை
திருக்குறள்:
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.
ADVERTISEMENTS
அறிந்து
கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும்
போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ அதைப்
பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்.
மு.வ உரை:
அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல்
மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும்
மற்றவர்க்கு ஐயம் உண்டாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவற்றவர், தாம் படிக்காத நூல்களையும் படித்தவர்
போலப் பேசிச்செயற்படுவது, அவர் உணமையிலேயே நன்கு அறிந்த நூல்களின் மேலும்
சந்தேகத்தைப் பிறர்க்கு உண்டாக்கும்.
ADVERTISEMENTS
If men what they have never learned assume to know,
Upon their real learning's power a doubt 'twill throw.
ADVERTISEMENTS
Fools pretending to know what has not been read (by them) will rouse suspicion even as to what they have thoroughly mastered.