மன்னரைச் சேர்ந்தொழுதல்
திருக்குறள்:
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.
ADVERTISEMENTS
ஒருவரின்
மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க காலத்தைத் தேர்ந்தெடுத்து,
வெறுப்புக்குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும்
வண்ணம் சொல்ல வேண்டும்.
மு.வ உரை:
அரசருடையக் குறிப்பை அறிந்து தக்கக் காலத்தை
எதிர்நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர்
விரும்புமாறுச் சொல்ல வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருக்கு எதையேனும் சொல்ல விரும்பினால்,
ஆட்சியாளரின் அப்போதைய மனநிலையை அறிந்து தான் சொல்லக் கருதிய செய்திக்கு
ஏற்ற சமயத்தையும் எண்ணி ஆட்சியாளருக்கு வெறுப்புத் தராததும், வேண்டியதும்
ஆகிய காரியத்தை அவர் விரும்புமாறு சொல்லுக.
ADVERTISEMENTS
Knowing the signs, waiting for fitting time, with courteous care,
Things not displeasing, needful things, declare.
ADVERTISEMENTS
Knowing
the (king's disposition and seeking the right time, (the minister)
should in a pleasing manner suggest things such as are desirable and not
disagreeable.