காலமறிதல்
திருக்குறள்:
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
ADVERTISEMENTS
பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல்.
மு.வ உரை:
அறிவுடையவர்
( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார்,
(வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார்.
சாலமன் பாப்பையா உரை:
தம்பகைவர்
அடாது செய்தால் அவர் அறியத் தம் பகைமையை அறிவுடையவர், விரைந்து வெளியே
காட்டமாட்டார், ஆனால், ஏற்ற காலம் நோக்கிச் சினத்தை மனத்திற்குள்
வைத்திருப்பர்.
ADVERTISEMENTS
The glorious once of wrath enkindled make no outward show,
At once; they bide their time, while hidden fires within them glow.
ADVERTISEMENTS
The wise will not immediately and hastily shew out their anger; they will watch their time, and restrain it within.