ஊழ்
திருக்குறள்:
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.
ADVERTISEMENTS
தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக
வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு
போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.
மு.வ உரை:
ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.
சாலமன் பாப்பையா உரை:
எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம்
நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால்
செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது.
ADVERTISEMENTS
பால் அல்ல பரியினும் ஆகாவாம் - தமக்கு ஊழல்லாத பொருள்கள்
வருந்திக்காப்பினும் தம்மிடத்து நில்லாவாம், தம உய்த்துச் சொரியினும் போகா -
ஊழால் தமவாய பொருள்கள் புறத்தே கொண்டுபோய்ச் சொரிந்தாலும் தம்மை விட்டுப்
போகா. (பொருள்களின் நிலையும் போக்கும் ஊழினான் ஆவதல்லது. காப்பு
இகழ்ச்சிகளான் ஆகா என்பதாம். இவை ஆறு பாட்டானும் பொருட்குக் காரணமாய ஊழின்
வலி கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
தம்முடைய பகுதியல்லாதனவற்றை வருந்திக் காப்பினும் அவை
தமக்கு ஆகா: தம்முடைய பகுதியாயினவற்றைக் கொண்டு சென்று சொரிந்து விடினும்
அவை போகா. இது முன்புள்ள செல்வம் காவற்படுதலும் களவு போதலும் ஊழினாலேயா
மென்றது.
Translation:
Things not your own will yield no good, howe'er you guard with pain;
Your own, howe'er you scatter them abroad, will yours remain.
ADVERTISEMENTS
Whatever is
not conferred by fate cannot be preserved although it be guarded with
most painful care; and that, which fate has made his, cannot be lost,
although one should even take it and throw it away.