கூடாவொழுக்கம்
திருக்குறள்:
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
ADVERTISEMENTS
புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப்
பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில்
ஈ.டுபடுவதற்கும் வேறுபாடு இல்லை.
மு.வ உரை:
தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச்
செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப்
போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
மேலான நிலையில் இருந்தும் கீழான செயல்களைச் செய்வது, வேட்டை ஆடுபவர் புதருக்குப் பின் மறைந்து நின்று பறவைகளைப் பிடிப்பது போலாம்.
ADVERTISEMENTS
தவம் மறைந்து அல்லவை செய்தல் - அவ் வலிஇல் நிலைமையான்
தவவேடத்தின்கண்ணே மறைந்து நின்று தவமல்லவற்றைச் செய்தல், வேட்டுவன் புதல்
மறைந்து புள் சிமிழ்த்தற்று - வேட்டுவன் புதலின் கண்ணே மறைந்து நின்று
புட்களைப் பிணித்தாற்போலும். ( 'தவம்' ஆகுபெயர்.தவம் அல்லவற்றைச்
செய்தலாவது, பிறர்க்கு உரிய மகளிரைத் தன்வயத்தாக்குதல், இதுவும் இத்தொழில்
உவமையான் அறிக.).
மணக்குடவர் உரை:
தவத்திலே மறைந்து தவ மல்லாதவற்றைச் செய்தல் வேட்டுவன்
தூற்றிலே மறைந்து புள்ளைப் பிணித்தாற் போலும். அர்ச்சுனன் தவமறைந்தல்லவை
செய்தான்.
Translation:
'Tis as a fowler, silly birds to snare, in thicket lurks.
When, clad in stern ascetic garb, one secret evil works.
ADVERTISEMENTS
He who hides
himself under the mask of an ascetic and commits sins, like a sportsman
who conceals himself in the thicket to catch birds.