உழவு
திருக்குறள்:
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
ADVERTISEMENTS
பல
தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின்
பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும்
உழவுத் தொழிலே சிறந்தது.
மு.வ உரை:
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.
சாலமன் பாப்பையா உரை:
உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு
வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால்
எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.
ADVERTISEMENTS
Howe'er they roam, the world must follow still the plougher's team;
Though toilsome, culture of the ground as noblest toil esteem.
ADVERTISEMENTS
Agriculture,
though laborious, is the most excellent (form of labour); for people,
though they go about (in search of various employments), have at last to
resort to the farmer.