குடிசெயல்வகை
திருக்குறள்:
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.
ADVERTISEMENTS
உரிய
கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல்
மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது.
மு.வ உரை:
குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச்
சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது
வேறொன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செயல் செய்யாமல்
விடமாட்டேன் என மன உறுதிகொள்ளும் பெருமையைக் காட்டிலும் மேலான பெருமை வேறு
இல்லை.
ADVERTISEMENTS
Who says 'I'll do my work, nor slack my hand',
His greatness, clothed with dignity supreme, shall stand.
ADVERTISEMENTS
There is no higher greatness than that of one saying. I will not cease in my effort (to raise my family).