பெருமை
திருக்குறள்:
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
ADVERTISEMENTS
பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும். பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்.
மு.வ உரை:
பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
பெருமைக்குரியவர்
பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்;
சிறுமைக்கு உரியவர்களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே
கூறிவிடுவர்.
ADVERTISEMENTS
Greatness will hide a neighbour's shame;
Meanness his faults to all the world proclaim.
ADVERTISEMENTS
The great hide the faults of others; the base only divulge them.