மருந்து

திருக்குறள்:
 நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் 
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நோய்
என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக
ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய
நோய்க்கும் இது பொருந்தும்).

மு.வ உரை:
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து,
அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச்
செய்யவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது
என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும்
வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட
வேண்டும்.

ADVERTISEMENTS
Translation:
Disease, its cause, what may abate the ill:
Let leech examine these, then use his skill.

ADVERTISEMENTS
Explanation:
Let
the physician enquire into the (nature of the) disease, its cause and
its method of cure and treat it faithfully according to (medical rule).