மருந்து

திருக்குறள்:
 மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 
வளிமுதலா எண்ணிய மூன்று.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

மு.வ உரை:
மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை:
மருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம்
என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து
இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்.

ADVERTISEMENTS
Translation:
The learned books count three, with wind as first; of these,
As any one prevail, or fail; 'twill cause disease.

ADVERTISEMENTS
Explanation:
If
(food and work are either) excessive or deficient, the three things
enumerated by (medical) writers, flatulence, biliousness, and phlegm,
will cause (one) disease.