கள்ளுண்ணாமை

திருக்குறள்:
 துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் 
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
மது
அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால்
அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று
கூறலாம்.

மு.வ உரை:
உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.

சாலமன் பாப்பையா உரை:
உறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்லர்;
அதுபோலவே, எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும்
வேறுபட்டவர் அல்லர்.

ADVERTISEMENTS
Translation:
Sleepers are as the dead, no otherwise they seem;
Who drink intoxicating draughts, they poison quaff, we deem.

ADVERTISEMENTS
Explanation:
They that sleep resemble the deed; (likewise) they that drink are no other than poison-eaters.