பெரியாரைப் பிழையாமை

திருக்குறள்:
 குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு 
நின்றன்னார் மாய்வர் நிலத்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
மலை
போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள், நிலைத்த பெரும்
செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய் விடுவார்கள்.

மு.வ உரை:
மலை போன்ற பெரியவர் கெட நினைத்தால். உலகில் அழியாமல் நிலைபெற்றாற் போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர்.

சாலமன் பாப்பையா உரை:
மலை ஒத்த ஆற்றல் உடைய பெரியவர், ஒருவரை அழிக்க
எண்ணிவிட்டால், அவர் எண்ணிய அளவிலேயே இப்பூமியில் நிலைபெற்று வாழ்பவர்
போன்றோரும், தம் குடியோடும்கூட அழிவர்.

ADVERTISEMENTS
Translation:
If they, whose virtues like a mountain rise, are light esteemed;
They die from earth who, with their households, ever-during seemed.

ADVERTISEMENTS
Explanation:
If
(the) hill-like (devotees) resolve on destruction, those who seemed to
be everlasting will be destroyed root and branch from the earth.