உட்பகை
திருக்குறள்:
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.
ADVERTISEMENTS
உட்பகைக்கு
அஞ்சி ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒரு
சோதனையான நேரத்தில் பச்சை பாண்டத்தை அறுக்கும் கருவிபோல அந்த உட்பகை அழிவு
செய்துவிடும்.
மு.வ உரை:
உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள
வேண்டும், தளர்ச்சி வந்த போது மட்கலத்தை அறுக்கும் கருவி போல் அந்த உட்பகை
தவறாமல் அழிவு செய்யும்.
சாலமன் பாப்பையா உரை:
உட்பகைக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்க; காக்காது
போனால் நமக்குத் தளர்வு வந்தபோது, மண்கலத்தை அறுக்கும் கைக்கருவிபோல
உட்பகையானவர் நம்மை உறுதியாக அழித்து விடுவர்.
ADVERTISEMENTS
Of hidden hate beware, and guard thy life;
In troublous time 'twill deeper wound than potter's knife.
ADVERTISEMENTS
Fear
internal enmity and guard yourself; (if not) it will destroy (you) in
an evil hour, as surely as the tool which cuts the potter's clay.