உட்பகை
திருக்குறள்:
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.
ADVERTISEMENTS
வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மு.வ உரை:
வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவினரைப் போல் இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
வாளைப்போல் வெளிப்படையாகத் தெரியும் பகைவர்க்கு அஞ்ச
வேண்டா; நண்பரைப்போல் வெளியில் காட்டி மனத்துள் பகைவராகவே இருப்போரின்
தொடர்புக்கு அஞ்சுக.
ADVERTISEMENTS
Dread not the foes that as drawn swords appear;
Friendship of foes, who seem like kinsmen, fear!.
ADVERTISEMENTS
Fear not foes (who say they would cut) like a sword; (but) fear the friendship of foes (who seemingly act) like relations.