பகைமாட்சி
திருக்குறள்:
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.
ADVERTISEMENTS
சினத்தையும்
மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும், எப்போது
வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம்.
மு.வ உரை:
ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும்
தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும்
எவர்க்கும் எளியவன்.
சாலமன் பாப்பையா உரை:
கோபம் குறையாத, ரகசியங்களைக் காக்கத் தெரியாத அரசைத் தோற்கடிப்பது எப்போதும், எங்கும், எவர்க்கும் எளிது.
ADVERTISEMENTS
His wrath still blazes, every secret told; each day
This man's in every place to every foe an easy prey.
ADVERTISEMENTS
He who neither refrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by all.