விருந்தோம்பல்

திருக்குறள்:
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் 
நல்வருந்து வானத் தவர்க்கு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி
வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை,
புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.

மு.வ உரை:
வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.

சாலமன் பாப்பையா உரை:
வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
செல் லிருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான் - தன்
கண்சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத் தான்,
அதனோடு உண்ண இருப்பான்; வானத்தவர்க்கு நல் விருந்து - மறுபிறப்பில்
தேவனாய் வானிலுள்ளார்க்கு நல் விருந்து ஆம். ('வருவிருந்து' என்பது இடவழு
அமைதி. நல்விருந்து: எய்தா விருந்து. இதனான் மறுமைக்கண் எய்தும் பயன்
கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
வந்த விருந்தினரைப் போற்றி வாராத விருந்தினரது வரவு
பார்த்திருக்குமவன், வானத்தவர்க்கு நல்விருந்தாவன். வரவு
பார்த்தல்-விருந்தின்றி யுண்ணாமை.

Translation:
The guest arrived he tends, the coming guest expects to see;
To those in heavenly homes that dwell a welcome guest is he.

ADVERTISEMENTS
Explanation:
He who, having
entertained the guests that have come, looks out for others who may yet
come, will be a welcome guest to the inhabitants of heaven.