இகல்
திருக்குறள்:
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.
ADVERTISEMENTS
வேற்றுமை
கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈ.டுபடுகிறான் என்றாலும் அவனோடு
கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும்
செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும்.
மு.வ உரை:
ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி
அன்பில்லாதவற்றைச் செய்தாலும் தான் இகழ் கொண்டு அவர்க்கு துன்பம்
செய்யாதிருத்தல் சிறந்ததாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நம்மோடு இணங்கிப் போக முடியாமல் ஒருவன் நமக்கு
வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவனைப் பகையாக எண்ணித் தீமை
செய்யாதிருப்பது சிறந்த குணம்.
ADVERTISEMENTS
Though men disunion plan, and do thee much despite
'Tis best no enmity to plan, nor evil deeds requite.
ADVERTISEMENTS
Though
disagreeable things may be done from (a feeling of) disunion, it is far
better that nothing painful be done from (that of) hatred.