கூடாநட்பு

திருக்குறள்:
 மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் 
சொல்லினால் தேறற்பாற்று அன்று.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பி எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது.

மு.வ உரை:
மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.

சாலமன் பாப்பையா உரை:
மனத்தால் நம்மோடு சேராதவரை எந்தக் காரியத்திலும் அவர்களின் சொல்லைக் கண்டு நம்ப முடியாது.

ADVERTISEMENTS
Translation:
When minds are not in unison, 'its never; just,
In any words men speak to put your trust.

ADVERTISEMENTS
Explanation:
In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart.