அவையறிதல்

திருக்குறள்:
 அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின் 
தொகையறிந்த தூய்மை யவர்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஒவ்வொரு
சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின்
தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.

மு.வ உரை:
சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்றச் சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
செஞ்சொல் பொருள் வெளிப்படையான சொல் தாய் இலக்கணச்
சொல்.(வெளிப்படையான பொருளை விட்டுவிட்டு வேறொன்றை உணர்த்தும் சொல் ஊர்
தூங்குகிறது) குறிப்புச் சொல் வெளிப்படையான பொருளை விட்டுவிட்டுக்
குறிப்பால் வேறொரு பொருள் தருவது பொன்காக்கும் பூதம் அவன்) ஆகிய சொற்களின்
கூட்டத்தை அறிந்த மனத்தூய்மையை உடையவர். தமக்கும் மேலான கல்வியாளர்
கூடியிருக்கும் அவை. சமமானவர் அவை. குறைவான கல்வியாளர் அவை என அவற்றின்
தரம் அறிந்து அங்கே பேசும் திறத்தை ஆராய்ந்து பேசுக.

ADVERTISEMENTS
Translation:
Men pure in heart, who know of words the varied force,
Should to their audience known adapt their well-arranged discourse.

ADVERTISEMENTS
Explanation:
Let
the pure who know the arrangement of words speak with deliberation
after ascertaining (the nature of) the court (then assembled).