குறிப்பறிதல்

திருக்குறள்:
 குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் 
என்ன பயத்தவோ கண்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஒருவரது
முகக்குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டி விடும் என்கிறபோது,
அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியாத கண்கள் இருந்தும் என்ன பயன்?.

மு.வ உரை:
(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக்குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புகளுள் கண்கள் என்னப் பயன்படும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் குறிப்பைக் கண்ட பின்பும் அவன் மனக்கருத்தை அறியமுடியவில்லை என்றால், உறுப்புகளுள் சிறந்த கண்களால் என்ன நன்மை?.

ADVERTISEMENTS
Translation:
By sign who knows not sings to comprehend, what gain,
'Mid all his members, from his eyes does he obtain?.

ADVERTISEMENTS
Explanation:
Of what use are the eyes amongst one's members, if they cannot by their own indications dive those of another ?.