புதல்வரைப் பெறுதல்
திருக்குறள்:
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
ADVERTISEMENTS
தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.
மு.வ உரை:
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர்
கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச்
செய்தலாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.
ADVERTISEMENTS
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி - தந்தை புதல்வனுக்குச்
செய்யும் நன்மையாவது;அவையத்து முந்தி இருப்பச் செயல் - கற்றார் அவையின்கண்
அவரினும் மிக்கு இருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல். (பொருளுடையான்
ஆக்குதல் முதலாயின துன்பம் பயத்தலின் நன்மை ஆகா என்பது கருத்து. இதனான்
தந்தை கடன் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம் அவையத்தின் கண்ணே முந்தியிருக்குமாறு கல்வி யுண்டாக்குதல்.
Translation:
Sire greatest boon on son confers, who makes him meet,
In councils of the wise to fill the highest seat.
ADVERTISEMENTS
WThe benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned.