மடியின்மை

திருக்குறள்:
 குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் 
மாசூர மாய்ந்து கெடும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்.

மு.வ உரை:
ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.

ADVERTISEMENTS
Translation:
Of household dignity the lustre beaming bright,
Flickers and dies when sluggish foulness dims its light.

ADVERTISEMENTS
Explanation:
By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished.