பொச்சாவாமை

திருக்குறள்:
 இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம் 
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
மமதையால்
பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து
போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.

மு.வ உரை:
தாம்
தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு
சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
தம் மகிழ்ச்சியில் மனவலிமை பெறும்பொழுது எல்லாம் முற்காலத்தில் மகிழ்ச்சியால் மறதி கொண்டு அழிந்தவர்களை நினைவிற் கொள்க.

ADVERTISEMENTS
Translation:
Think on the men whom scornful mind hath brought to nought,
When exultation overwhelms thy wildered thought.

ADVERTISEMENTS
Explanation:
Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy.