சிற்றினஞ்சேராமை

திருக்குறள்:
 மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு 
இனத்துள தாகும் அறிவு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.

மு.வ உரை:
ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.

ADVERTISEMENTS
Translation:
Man's wisdom seems the offspring of his mind;
'Tis outcome of companionship we find.

ADVERTISEMENTS
Explanation:
Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions.