பெரியாரைத் துணைக்கோடல்

திருக்குறள்:
 முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ் 
சார்பிலார்க் கில்லை நிலை.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
கட்டடத்தைத்
தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின்
நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்.

மு.வ உரை:
முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
முதல்
இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும்
துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை.

ADVERTISEMENTS
Translation:
Who owns no principal, can have no gain of usury;
Who lacks support of friends, knows no stability.

ADVERTISEMENTS
Explanation:
The
There can be no gain to those who have no capital; and in like manner
there can be no permanence to those who are without the support of
adherents.