இறைமாட்சி
திருக்குறள்:
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
ADVERTISEMENTS
துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை
எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்.
மு.வ உரை:
அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அநீதிக்கும்
பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும்
முன்காக்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் - இந்நான்கிலும்
குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க வேண்டும்.
ADVERTISEMENTS
Courage, a liberal hand, wisdom, and energy: these four
Are qualities a king adorn for evermore.
ADVERTISEMENTS
Never to fail in these four things, fearlessness, liberality, wisdom, and energy, is the kingly character.