புலான்மறுத்தல்

திருக்குறள்:
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் 
புண்ணது உணர்வார்ப் பெறின்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்.

மு.வ உரை:
புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.

சாலமன் பாப்பையா உரை:
இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
புலால் பிறிதொன்றன் புண் - புலாலாவது பிறிதோர் உடம்பின்
புண், அது உணர்வார்ப் பெறின் உண்ணாமை வேண்டும் - அது தூய்து அன்மை
அறிவாரைப் பெறின் அதனை உண்ணாதொழியல் வேண்டும். ('அஃது' என்னல் வேண்டும்
ஆய்தம் விகாரத்தால்தொக்கது. அம்மெய்ம்மை உணராமையின், அதனை உண்கின்றார்
என்பதாம். பொருந்தும் ஆற்றானும் புலால் உண்டல் இழிந்தது என்பது இதனான்
கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
உயிர் நிலையைப் பெறுதல் ஊனை யுண்ணாமையினால் உள்ளது;
ஊனையுண்ண உண்டாரை எல்லாவுலகத்தினும் இழிந்த நரகம் விழுங்கிக் கொண்டு
அங்காவாது. அங்காவாமை- புறப்பட விடாமை.

Translation:
With other beings' ulcerous wounds their hunger they appease;
If this they felt, desire to eat must surely cease.

ADVERTISEMENTS
Explanation:
If men should come to know that flesh is nothing but the unclean ulcer of a body, let them abstain from eating it.