அருளுடைமை

திருக்குறள்:
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் 
அற்றார்மற் றாதல் அரிது.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது.

மு.வ உரை:
பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர்,
அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து
விளங்குதல் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
பொருள் இல்லாமல் ஏழையாய்ப் போனவர் திரும்பவும் செல்வத்தால்
பொலிவு பெறலாம்; அருள் இல்லாமல் போனவரோ, போனவர்தாம்; மீண்டும் அருள்
உள்ளவராய் ஆவது கடினம்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
பொருள் அற்றார் ஒருகால்பூப்பர்- ஊழான் வறியராயினார் அது
நீங்கிப் பின் ஒரு காலத்துச் செல்வத்தால் பொலிவர், அருள் அற்றார் அற்றார்
மற்று ஆதல் அரிது - அவ்வாறு அன்றி அருளிலாதார் பாவம் அறாமையின் அழிந்தாரே;
பின் ஒருகாலத்தும் ஆதல் இல்லை. ( 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது, மேல்
பொருள் இன்மையொடு ஒருவாற்றான் ஒப்புமை கூறினார் ஆகலின், அது மறுத்து, பிற
ஆற்றான் அதனினும் கொடியது என்பது கூறியவாறு.).

மணக்குடவர் உரை:
பொருளில்லாதார் ஒருகாலத்தே பொருளுடையராதலும் கூடும்;
அருளில்லாதார் கெட்டார், பின்பு ஆக்கமுண்டாகாது. இது பொருளின்மையேயன்றி
எல்லாக் கேடு முண்டாமென்றது.

Translation:
Who lose the flower of wealth, when seasons change, again may bloom;
Who lose 'benevolence', lose all; nothing can change their doom.

ADVERTISEMENTS
Explanation:
Those who are
without wealth may, at some future time, become prosperous; those who
are destitute of kindness are utterly destitute; for them there is no
change.