அருளுடைமை

திருக்குறள்:
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி 
அல்லவை செய்தொழுகு வார்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.

மு.வ உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை,
உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை
மறந்தவர் என்பார்.

சாலமன் பாப்பையா உரை:
அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார் - உயிர்கள் மாட்டுச்
செய்யப்படும் அருளைத் தவிர்ந்து தவிரப்படும் கொடுமைகளைச் செய்து
ஒழுகுவாரை, பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் - முன்னும்
உறுதிப்பொருளைச் செய்யாது தாம் துன்புறுகின்றமையை மறந்தவர் என்று சொல்லுவர்
நல்லோர். (உறுதிப்பொருள்: அறம், 'துன்புறுதல்' - பிறவித்துன்பம்
மூன்றனையும் அனுபவித்தல். மறந்திலராயின், அவ்வாறு ஒழுகார் என்பது
கருத்து.).

மணக்குடவர் உரை:
முற்பிறப்பின்கண் அருளினின்று நீங்கி அல்லாதவற்றைச்
செய்தொழுகினவர் இப்பிறப்பின்கண் பொருளினின்று நீங்கி மறவியுமுடையவரென்று
சொல்லுவர். இது பொருளில்லையாமென்றது.

Translation:
AGain of true wealth oblivious they eschew,
Who 'grace' forsake, and graceless actions do.

ADVERTISEMENTS
Explanation:
(The wise) say
that those who neglect kindness and practise cruelties, neglected
virtue (in their former birth), and forgot (the sorrows which they must
suffer).