புகழ்

திருக்குறள்:
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று 
ஈவார்மேல் நிற்கும் புகழ்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்.

மு.வ உரை:
புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.

சாலமன் பாப்பையா உரை:
சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
உரைப்பார் உரைப்பவை எல்லாம் - உலகத்து ஒன்று உரைப்பார்
உரைப்பன எல்லாம், இரப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் புகழ் -
வறுமையான் இரப்பார்க்கு அவர் வேண்டியது ஒன்றை ஈவார் கண் நிற்கும் புகழாம்.
(புகழ்தான் உரையும் பாட்டும் என இருவகைப்படும்(புறநா.27) அவற்றுள்
'உரைப்பார் உரைப்பவை' என எல்லார்க்கும் உரிய வழக்கினையே
எடுத்தாராயினும்,இனம் பற்றிப் புலவர்க்கே உரிய செய்யுளும் கொள்ளப்படும்,
படவே 'பாடுவார் பாடுவன எல்லாம் "புகழாம் என்பதூஉம் பெற்றாம். ஈதற்காரணம்
சிறந்தமை இதனுள்ளும் காண்க. இதனைப் பிறர்மேலும் நிற்கும் என்பார். தாம்
எல்லாம் சொல்லுக ; புகழ் ஈவார் மேல் நிற்கும்' என்று உரைப்பாரும் உளர். அது
புகழது சிறப்பு நோக்காமை அறிக.).

மணக்குடவர் உரை:
சொல்லுவார் சொல்லுவனவெல்லாம் இரந்துவந்தார்க்கு அவர் வேண்டியதொன்றைக் கொடுப்பார்மேல் நில்லாநின்ற புகழாம்.

Translation:
The speech of all that speak agrees to crown
The men that give to those that ask, with fair renown.

ADVERTISEMENTS
Explanation:
Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor.