ஈகை

திருக்குறள்:
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய 
தாமே தமியர் உணல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பிறர்க்கு ஈ.வதால் குறையக் கூடுமென்று, குவித்து
வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும்
கொடுமையானது.

மு.வ உரை:
பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.

சாலமன் பாப்பையா உரை:
பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
நிரப்பிய தாமே தமியர் உணல் - பொருட்குறை நிரப்பவேண்டி
வறியார்க்கு ஈயாது தாமே தனித்து உண்டல் இரத்தலின் இன்னாது மன்ற -
ஒருவர்க்குப் பிறர்பால் சென்று இரத்தலினும் இன்னாது ஒருதலையாக. (பொருட்குறை
நிரப்பலாவது: ஒரோ எண்களைக் குறித்து இத்துணை ஈட்டுவதும் என ஈட்டத்தையே
மேற்கொண்டு இவறிக் கூட்டுதல். தனித்தல்: பிறரை ஒழித்தல். இரத்தற்கு உள்ளது
அப்பொழுதை இளிவரவே: பின் நல்குரவு இல்லை, தமியர் உண்டற்கு அவை இரண்டும்
உளவாம் ஆகலின், 'இரத்தலின் இன்னாது' என்றார். 'நிரப்பிய' என்பதற்குத்
'தேடிய உணவுகளை' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை:
இரத்தல்போல மெய்யாக இன்னாதாம்: தேடின உணவைத் தாமே தமியராயிருந் துண்டல். தமியரா யென்றது ஒருவருங் காணாமலென்றது.

Translation:
They keep their garners full, for self alone the board they spread;-
'Tis greater pain, be sure, than begging daily bread!.

ADVERTISEMENTS
Explanation:
Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more unpleasant than begging.