வெஃகாமை

திருக்குறள்:
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் 
வெஃகி வெறிய செயின்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக்
கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான்
என்ன பயன்?.

மு.வ உரை:
யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?.

சாலமன் பாப்பையா உரை:
பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற
செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால்
அவருக்கு ஆகும் பயன்தான் என்ன?.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
அஃகி அகன்ற அறிவு என்னாம் - நுண்ணிதாய் எல்லா நூல்களினும்
சென்ற தம் அறிவு என்ன பயத்ததாம்; வெஃகியார் மாட்டும் வெறிய செயின் - பொருளை
விரும்பி, யாவர் மாட்டும் அறிவோடு படாத செயல்களை அறிவுடையார்
செய்வாராயின். ('யார்மாட்டும் வெறிய செய்த'லாவது தக்கார் மாட்டும் தகாதார்
மாட்டும், இழிந்தனவும், கடியனவும் முதலியன செய்தல். அறிவிற்குப் பயன், அவை
செய்யாமையாகலின் 'அறிவு என்னாம்' என்றார்.).

மணக்குடவர் உரை:
நுண்ணிதாகப் பரந்த அறிவுடையானாயினும் அதனாற் பயன் யாதாம்?
எல்லார் மாட்டும் பொருளை விரும்பி யீரமில்லாதன செய்வனாயின், இஃது
அறிவுடையார் செய்யாரென்றது.

Translation:
What gain, though lore refined of amplest reach he learn,
His acts towards all mankind if covetous desire to folly turn?.

ADVERTISEMENTS
Explanation:
What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all ?.