வெஃகாமை
திருக்குறள்:
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
ADVERTISEMENTS
யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக்
கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான்
என்ன பயன்?.
மு.வ உரை:
யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற
செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால்
அவருக்கு ஆகும் பயன்தான் என்ன?.
ADVERTISEMENTS
அஃகி அகன்ற அறிவு என்னாம் - நுண்ணிதாய் எல்லா நூல்களினும்
சென்ற தம் அறிவு என்ன பயத்ததாம்; வெஃகியார் மாட்டும் வெறிய செயின் - பொருளை
விரும்பி, யாவர் மாட்டும் அறிவோடு படாத செயல்களை அறிவுடையார்
செய்வாராயின். ('யார்மாட்டும் வெறிய செய்த'லாவது தக்கார் மாட்டும் தகாதார்
மாட்டும், இழிந்தனவும், கடியனவும் முதலியன செய்தல். அறிவிற்குப் பயன், அவை
செய்யாமையாகலின் 'அறிவு என்னாம்' என்றார்.).
மணக்குடவர் உரை:
நுண்ணிதாகப் பரந்த அறிவுடையானாயினும் அதனாற் பயன் யாதாம்?
எல்லார் மாட்டும் பொருளை விரும்பி யீரமில்லாதன செய்வனாயின், இஃது
அறிவுடையார் செய்யாரென்றது.
Translation:
What gain, though lore refined of amplest reach he learn,
His acts towards all mankind if covetous desire to folly turn?.
ADVERTISEMENTS
What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all ?.