பொறையுடைமை

திருக்குறள்:
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் 
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை
உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக் கொள்ளாமல்
தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.

மு.வ உரை:
( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார்
ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து
மதிப்பர்.

சாலமன் பாப்பையா உரை:
தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப்
பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக்
கருதி மதிப்பர்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
ஒறுத்தாரை ஒன்றாக வையார் - பிறன் தமக்குத் தீங்கு
செய்தவழிப் பொறாது அவனை ஒறுத்தாரை அறிவுடையார் ஒரு பொருளாக மனத்துக்
கொள்ளார்; பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர் - அதனைப் பொறுத்தாரைப்
பொன்போல் பொதிந்து கொள்வர். (ஒறுத்தவர் தாமும் அத் தீங்கு செய்தவனோடு
ஒத்தலின், 'ஒன்றாகவையார்' என்றார். 'பொதிந்து வைத்தல்', சால்புடைமை பற்றி
இடைவிடாது நினைத்தல்.).

மணக்குடவர் உரை:
தமக்குத் துன்பஞ் செய்தாரை மாறாக ஒறுத்தாரை யொரு பொருளாக
மதித்து வையார். பொறுத்தாரைப் பொன்னைப் பொதிந்து வைத்தாற்போலப் போற்றுவார்
உலகத்தார்.

Translation:
Who wreak their wrath as worthless are despised;
Who patiently forbear as gold are prized.

ADVERTISEMENTS
Explanation:
(The wise) will not at all esteem the resentful. They will esteem the patient just as the gold which they lay up with care.