புணர்ச்சிவிதும்பல்

திருக்குறள்:
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் 
காணா தமையல கண்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை.

மு.வ உரை:
என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.

சாலமன் பாப்பையா உரை:
என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) பேணாது பெட்பவே செய்யினும் - நம்மை
அவமதித்துத் தான் செய்ய வேண்டியனவே செய்யுமாயினும்; கொண்களைக் கண் காணாது
அமையல - கொண்கனை என் கண்கள் காணாது அமைகின்றன இல்லை. (தன் விதுப்புக்
கண்கள்மேல் ஏற்றப்பட்டது. 'அத்தன்மையேன் அவனோடு புலக்குமாறு என்னை' ?
என்பதாம்.).

மணக்குடவர் உரை:
தம்மை விரும்பாது தன்மனம் விரும்புவனவே செய்தானாயினும்
கொண்கனைக் காணாது என்கண்கள் அமையமாட்டா. இவையெல்லாம் ஊடற்பகுதியானமையும்
முன்னுறுபுணர்ச்சி யின்மையும் ஆமாறு கண்டுகொள்க.

Translation:
Although his will his only law, he lightly value me,
My heart knows no repose unless my lord I see.

ADVERTISEMENTS
Explanation:
Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him.