குறிப்பறிவுறுத்தல்

திருக்குறள்:
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி 
அன்பின்மை சூழ்வ துடைத்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது
மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை உணர்த்துவது போல்
இருக்கிறதே.

மு.வ உரை:
பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
அவரைப் பிரிந்து இருந்ததால் ஏற்பட்ட துன்பத்தினைப்
பெரிதும் பொறுத்துக் கொண்டு இப்போது நான் மகிழும் வண்ணம் அவர் என்னைக்
கூடுவது அவரது அன்பின்மையை எண்ணிப் பார்க்கச் செய்கிறது.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(தலைமகன் குறிப்பறிந்த தலைமகள், அதனை அது தெளிவிக்கச்
சென்ற தோழிக்கு அறிவுறுத்தது.) பெரிது ஆற்றிப் பெட்பக்கலத்தல் - காதலர்
வந்து தம் பிரிவினானாய துன்பத்தினை மிகவும் ஆற்றி நாம் மகிழும் வண்ணம்
கலக்கின்ற கலவி; அரிது ஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து - இருந்தவாற்றான்
மேலும் அத்துன்பத்தினை அரிதாக ஆற்றியிருந்து அவரது அன்பின்மையை நினையும்
தன்மையுடைத்து. (பிரிதற் குறிப்பினாற் செய்கின்றதாகலான் முடிவில் இன்னாதாகா
நின்றது என்பதாம்.).

மணக்குடவர் உரை:
ஊடினகாலத்து அதன் அளவின்றி மிகவுமாற்றிப் புணருங்காலத்து
முன்புபோலாகாது மேன்மேலும் விரும்புமாறு புணர்தல், யான் அரிதாக
ஆற்றியிருந்து தம்மன்பின்மையை யெண்ணுவதொரு பிரிவுடைத்து. இது பிரியலுற்ற
தலைமகனது குறிப்பறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

Translation:
While lovingly embracing me, his heart is only grieved:
It makes me think that I again shall live of love bereaved.

ADVERTISEMENTS
Explanation:
The embrace
that fills me with comfort and gladness is capable of enduring (my
former) sorrow and meditating on his want of love.