நினைந்தவர்புலம்பல்

திருக்குறள்:
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் 
உள்ளினும் உள்ளம் சுடும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே
பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பிணைக்காமல் மறந்துவிட்டால் என்ன
ஆகுமோ?.

மு.வ உரை:
( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?.

சாலமன் பாப்பையா உரை:
அந்த நாள்களின் நினைவுகளை மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்; அப்படி இருக்க மறந்தால் வாழ்வது எப்படி?.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும் -
அவ்வின்பத்தை மறத்தலறியேனாய் இன்று உள்ளாநிற்கவும் பிரிவு என் உள்ளத்தைச்
சுடாநின்றது; மறப்பின் எவனாவன் - அங்ஙனம் பிரிவாற்றாத யான் மறந்தால் இறந்து
படாது உளேனாவது எத்தால்? (மறக்கப்படுவது அதிகாரத்தான் வந்தது. 'மன்'
ஈண்டும் அதுபட நின்று ஒழியிசையாயிற்று. கொல்: அசைநிலை.).

மணக்குடவர் உரை:
அவரை மறந்தால் என்னாவன் கொல்லோ: மறப்பறியேனாய் நினைக்கவும்
இக்காமம் நெஞ்சத்தைச் சுடாநின்றது. இது சீரியன உள்ளிப் பூரியன மறத்தல்
வேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

Translation:
If I remembered not what were I then? And yet,
The fiery smart of what my spirit knows not to forget!.

ADVERTISEMENTS
Explanation:
I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?.