பிரிவாற்றாமை
திருக்குறள்:
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.
ADVERTISEMENTS
முன்பெல்லாம்
அவரைக் கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமாக இருந்தது; ஆனால், இப்போது உடல்
தழுவிக் களிக்கும் போதுகூடப் பிரிவை எண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா
வருத்துகிறது!.
மு.வ உரை:
அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது, இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:
அவர் பார்வை எனக்கு மகிழ்ச்சிதான். அவர் செயலோ பிரியப் போகிறார் என்ற அச்சத்தைத் தந்து கொண்டிருக்கிறதே!.
ADVERTISEMENTS
It once was perfect joy to look upon his face;
But now the fear of parting saddens each embrace.
ADVERTISEMENTS
His very look was once pleasing; but (now) even intercourse is painful through fear of separation.