செய்ந்நன்றி அறிதல்

திருக்குறள்:
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த 
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப்
புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச்
செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.

மு.வ உரை:
முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச்
செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம்
கெடும்.

சாலமன் பாப்பையா உரை:
முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற
தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில்
அத்தீமை மறையும்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
கொன்று அன்ன இன்னா செயினும் - தமக்கு முன் ஒரு நன்மை
செய்தவர், பின் கொன்றால் ஒத்த இன்னாதவற்றைச் செய்தாராயினும்; அவர் செய்த
நன்று ஒன்று உள்ளக் கெடும் - அவையெல்லாம் அவர் செய்த நன்மை ஒன்றனையும்
நினைக்க இல்லையாம். (தினைத்துணை பனைத்துணையாகக் கொள்ளப்படுதலின்,
அவ்வொன்றுமே அவற்றையெல்லாம் கெடுக்கும் என்பதாம். இதனால் நன்றல்லது அன்றே
மறக்கும் திறம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
தமக்கு முன்பு நன்மை செய்தார் தம்மைக் கொன்றாலொத்த
இன்னாமையைப் பின்பு செய்யினும் அவர் முன்பு செய்த நன்றி யொன்றை நினைக்க
அவ்வின்னாமை யெல்லாங் கெடும்.

Translation:
Effaced straightway is deadliest injury,
By thought of one kind act in days gone by.

ADVERTISEMENTS
Explanation:
Though one inflict an injury great as murder, it will perish before the thought of one benefit (formerly) conferred.