செய்ந்நன்றி அறிதல்

திருக்குறள்:
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது 
அன்றே மறப்பது நன்று.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.

மு.வ உரை:
ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
நன்றி மறப்பது நன்று அன்று -ஒருவன் முன் செய்த நன்மையை
மறப்பது ஒருவற்கு அறன் அன்று; நன்று அல்லது அன்றே மறப்பது நன்று - அவன்
செய்த தீமையைச் செய்த பொழுதே மறப்பது அறன். (இரண்டும் ஒருவனாற் செய்யப்பட்ட
வழி, மறப்பதும் மறவாததும் வகுத்துக் கூறியவாறு.).

மணக்குடவர் உரை:
பிறர் செய்த நன்றியை மறப்பது என்றும் நன்றல்ல: பிறர் செய்த
தீமையை அன்றே மறப்பதன்றே நன்றாம். இது தீமையை மறக்க வேண்டுமென்று
கூறிற்று.

Translation:
'Tis never good to let the thought of good things done thee pass away;
Of things not good, 'tis good to rid thy memory that very day.

ADVERTISEMENTS
Explanation:
It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted).