கயமை

திருக்குறள்:
 அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் 
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
தாங்கள்
விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை
ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள். மற்ற சமயங்களில் அவர்கள்
பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.

மு.வ உரை:
கீழ் மக்களின் ஆசாரத்திற்கு காரணமாக இருப்பது அச்சமே, எஞ்சியவற்றில் அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை:
கயவர்களிடம் நல்ஒழுக்கம் இருந்தால் ஆட்சியைப் பற்றிய
பயமே காரணம் ஆகும். அதையும் மீறி அவர்கள் ஆசைப்படும் பொருள் கிடைப்பதாக
இருந்தால் அதனாலும் கொஞ்சம் ஒழுக்கம் இருக்கும்.

ADVERTISEMENTS
Translation:
Fear is the base man's virtue; if that fail,
Intense desire some little may avail.

ADVERTISEMENTS
Explanation:
(The principle of) behaviour in the mean is chiefly fear; if not, hope of gain, to some extent.