இரவு

திருக்குறள்:
 கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று 
இரப்பவர் மேற்கொள் வது.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
உள்ளதை
இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான்
இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்.

மு.வ உரை:
ஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான்.

சாலமன் பாப்பையா உரை:
கண் எதிரே நின்று, வறுமைப்பட்டவர் வாயால் கேட்காமல்
கண்ணால் கேட்கத் தொடங்குவது, ஒளிவுமறைவு இல்லாமல் அவருக்குக் கொடுப்பவர்
இவ்வுலகத்தில் இருப்பதால்தான்.

ADVERTISEMENTS
Translation:
Because on earth the men exist, who never say them nay,
Men bear to stand before their eyes for help to pray.

ADVERTISEMENTS
Explanation:
As
there are in the world those that give without refusing, there are
(also) those that prefer to beg by simply standing before them.