நல்குரவு

திருக்குறள்:
 துப்புர வில்லார் துவரத் துறவாமை 
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஒழுங்குமறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத் துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு.

மு.வ உரை:
நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்க கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:
உண்ண, உடுத்த ஏதம் இல்லாதவர் இல்லறத்தை முழுமையாகத்
துறந்து விடாதிருப்பது, பிறர் வீட்டில் இருக்கும் உப்புக்கும் கஞ்சித்
தண்ணீருக்கும் எமனாம்.

ADVERTISEMENTS
Translation:
Unless the destitute will utterly themselves deny,
They cause their neighbour's salt and vinegar to die.

ADVERTISEMENTS
Explanation:
The destitute poor, who do not renounce their bodies, only consume their neighbour's salt and water.