உழவு

திருக்குறள்:
 தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் 
வேண்டாது சாலப் படும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.

மு.வ உரை:
ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால்,
ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து
விளையும்.

சாலமன் பாப்பையா உரை:
உழுத மண்ணை, ஏறத்தாழ 35 கிராம் புழுதி, 8.75 கிராம்
புழுதி ஆகும்படி காய விட்டுப் பிறகு பயிர் செய்தால் ஒரு கைப்பிடி அளவு
எருவும் இடாமலேயே கூட அந்தப் பயிர் அதிகம் விளையும்.

ADVERTISEMENTS
Translation:
Reduce your soil to that dry state, When ounce is quarter-ounce's weight;
Without one handful of manure, Abundant crops you thus secure.

ADVERTISEMENTS
Explanation:
If the land is dried so as to reduce one ounce of earth to a quarter, it will grow plentifully even without a handful of manure.