உழவு

திருக்குறள்:
 உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் 
விட்டேம்என் பார்க்கும் நிலை.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்.

மு.வ உரை:
உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால்,
விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும்
துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
உழுபவர் கை மட்டும் வேலை செய்யாது மடங்கிவிட்டால்,
எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டுவிட்டோம் என்று கூறும்
துறவியரும்கூட அவரது அறத்தில் நிலைத்து நிற்க முடியாது.

ADVERTISEMENTS
Translation:
For those who 've left what all men love no place is found,
When they with folded hands remain who till the ground.

ADVERTISEMENTS
Explanation:
If the farmer's hands are slackened, even the ascetic state will fail.