நன்றியில்செல்வம்
திருக்குறள்:
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.
ADVERTISEMENTS
அடங்காத
ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை
அனுபவிக்காமல் செத்துப் போகிறவனுக்கு, அப்படிச் சேர்க்கப்பட்ட
செல்வத்தினால் என்ன பயன்?.
மு.வ உரை:
ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து
வைத்து அதை உண்டு நூகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால் செய்ய
முடிந்தது ஒன்றுமில்லை.
சாலமன் பாப்பையா உரை:
தன் வீடு நிறையப் பெரும்பொருள் சேர்த்து
வைத்திருந்தும், கஞ்சத்தனத்தால் அதை அனுபவிக்காதவனுக்கு அப்பொருளால் பயன்
இல்லை. ஆதலால் அவன் இருந்தாலும் இறந்தவனே.
ADVERTISEMENTS
Who fills his house with ample store, enjoying none,
Is dead. Nought with the useless heap is done.
ADVERTISEMENTS
He
who does not enjoy the immense riches he has heaped up in his house, is
(to be reckoned as) dead, (for) there is nothing achieved (by him).