சான்றாண்மை

திருக்குறள்:
 கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து 
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஆற்ற
வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற
மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும்.

மு.வ உரை:
கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை:
நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர்.

ADVERTISEMENTS
Translation:
All goodly things are duties to the men, they say
Who set themselves to walk in virtue's perfect way.

ADVERTISEMENTS
Explanation:
It
is said that those who are conscious of their duty and behave with a
perfect goodness will regard as natural all that is good.