பழைமை

திருக்குறள்:
 விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற் 
கேளாது நட்டார் செயின்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பழகிய
நட்பின் உரிமை காரணமாக தமது நண்பர் தம்மைக் கேளாமலே ஒரு செயல் புரிந்து
விட்டாலும்கூட நல்ல நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார்.

மு.வ உரை:
உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த
உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி
உடன்பட்டிருப்பர் அறிஞர்.

சாலமன் பாப்பையா உரை:
தம் நண்பர் உரிமை எடுத்துக் கொண்டு தம்மைக் கேளாமலேயே
ஒரு காரியத்தைச் செய்தால் அக்காரியத்தைத் தாம் அறிந்திருந்தாலும் நண்பரால்
விரும்பிச் செய்யப்படுவது என்பதனால் அறிவுடையார் அதை ஏற்றுக் கொள்ளவே
செய்வர்.

ADVERTISEMENTS
Translation:
When friends unbidden do familiar acts with loving heart,
Friends take the kindly deed in friendly part.

ADVERTISEMENTS
Explanation:
If
friends, through the right of friendship, do (anything) without being
asked, the wise will be pleased with them on account of its
desirability.