அரண்

திருக்குறள்:
 ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் 
போற்று பவர்க்கும் பொருள்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பகைவர்
மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித்
தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும்.

மு.வ உரை:
(படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண்
சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக
அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பிறர்மேல் படை எடுத்துச் செல்பவர்க்கும் சிறந்தது அரண்; பிறருக்குப் பயந்து உள்ளிருப்பவர்க்கும் அதுவே சிறந்தது.

ADVERTISEMENTS
Translation:
fort is wealth to those who act against their foes;
Is wealth to them who, fearing, guard themselves from woes.

ADVERTISEMENTS
Explanation:
A
fort is an object of importance to those who march (against their foes)
as well as to those who through fear (of pursuers) would seek it for
shelter.