அவையஞ்சாமை

திருக்குறள்:
 பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து 
அஞ்சு மவன்கற்ற நூல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
அவை
நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும்
அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான
வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும்.

மு.வ உரை:
அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் உள்ள கூர்மையான வாள் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:
கற்றவர் கூடிய அவையில் பேசப் பயப்படுபவன் கற்ற நூல், பகைமுன்னே நடுங்கும் பேடியின் கையில் இருக்கும் வாளுக்குச் சமம்.

ADVERTISEMENTS
Translation:
As shining sword before the foe which 'sexless being' bears,
Is science learned by him the council's face who fears.

ADVERTISEMENTS
Explanation:
The
learning of him who is diffident before an assembly is like the shining
sword of an hermaphrodite in the presence of his foes.